பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. உலகத்துக்கு நல்லுபதேசம் செய்ய நாமே தகுதியுடையோர் சென்ற வாரம் சென்னப்பட்டனம் கந்தசாமி கோயில் வஸந்த மண்டபத்தில், சாது மஹாசங்கத்தாரின் ஏற்பாட் டிலே ஒரு கூட்டம் நடந்தது. அதிலே, ஸ்வாமி அத்புதா நந்தர் என்பவர் ஒரு நேர்த்தியான உபந்யாஸம் செய்த தாகத் தெரிகிறது. ஸ்வாமி சொல்லியதன் சுருக்கம்:-"மத விஷயங்களில் நமது முன்னேர் மிகவும் உயர்ந்த ஆராய்ச்சிகள் செய்து வைத்திருக்கிருர்கள். இவற்றை நாம் நன்ருகத் தெரிந்து கொண்டு உலகத்தாருக்கெல்லாம் உபதேசம் செய்ய வேண்டும். இவ்விஷயத்தில் அமெரிக்கா, ஐரோப்பா முதலிய வெளி தேசத்தார் நமது உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர். இனி, 'மதவிஷயங்கள்’ என்பவை பாரமார்த்திக உண்மைகளாம்; அதாவது ஐம்புலன்களுக் கெட்டாத, சுத்த அறிவில்ை காணுதற்குரிய, தெய்விக உண்மைகள்; இசை ஞானம், பக்தி, யோகம் என்னும் வழிகளிலே கிடைப்பனவாகும். இவற்றை நமது முன்னேர் பெரிய பாடுபட்டுத் தேடித் தம்முடைய நூல்களிலே திரட்டி வைத்திருக்கிருர்கள். இந்தச் செல்வத்தை நாம் திறம்ை யுடன் கையாண்டு உலகத்தாருக்கெல்லாம் வாரிக் கொடுத்து இவ்வுலகத்தின் துன்பங்களையும் சிறுமைகளை யும், அறியாமைகளையும் மாற்றி இதனை மேன்மைப்படுத்த வேண்டும். தாம் இன்பு றுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றிந்தார்