பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இந்தியாவின் ஞானுேபதேசமாகிய அமிர்தத்துக்கு ஐரோப்பாவில் உயர்ந்த தரத்து மேதாவிகள் எத்தனை வேட்கையுடன் காத்திருந்தனரென்பது மேலே கூறிய ஆஸ்திரிய நிருபரின் கடிதத்திலே மற்ருெரு பகுதியில் பின்வரும் வசனத்தாலே விளக்கப்படுகின்றது :-"இந்த நூற்ருண்டின் சிதறுபட்ட குழந்தைகளாகிய நாம் (ஐரோப்பியர்) இப்போது ஒற்றுமையை நாடித் தவிப்பது போல் எப்போதும் தவித்தது கிடையாது. நரகவாதனைப் படுகிற நாம் இன்றும் எதிர்காலத்தில் இந்த மண்மீது தேவலோக அனுபவங்களெய்துவோம் என்று கனவுகள் காண்பதை விடவில்லை. இப்படியிருந்த எங்கள் முன்னே மற்ருெரு லோகத்திலிருந்தொரு மனிதன் வந்தது போலே டாகுர் வந்தார். அவரை நல்வரவு கூறி உபசரிப்பதற்கு இப்போது நாம் தகுதி பெற்றிருப்பது போல் இதுவரை எப்போதுமிருந்ததில்லை. இப்போது ஆயத்தமாக இருப்பது போல், இதுவரை எப்போதும் ஆயத்தமாக இருந்தது கிடையாது. இஃது நேற்று அவருக்கு நடந்த உபசாரங் களாலே நன்கு விளங்கிற்று' என்று அந் நிருபர் கூறுகிரு.ர். இனி பிரான்ஸ் முதலிய மற்ற தேசங்களில் இந்தக் கவீசுவரருக்கு நடந்த உபசாரங்களைப் பற்றிப் பேசு முன்னர், இவர் இந்தியாவின் எந்த உண்மையைத் தெரி வித்தபடியாலே இங்ங்ணம் பாரத பூமிக்கு பூலோக குருத் தன்மை ஏற்படுத்திக் கொடுக்க வல்லோர் ஆயினர் என்ப தைச் சற்றே ஆராய்ச்சி புரிவோம்: அஃது பழைய வேத உண்மை; எல்லாப் பொருள்களும் ஒரே வஸ்துவாகக் காண்பவன் ஒருவனுக்கு மருட்சி யேது? துயரமேது? எல்லாம் ஒரே பொருளென்று கண்டவன் எதனிடத்தும் கூச்சமேனும், வெறுப்பேனும், அச்சமேனும் எய்தமாட்டான். அவன் எல்லாப் பொருள்களிடத்தும்