பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 லாத கட்டுப் பாடுகளாலும் எத்தனை வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், இந்த வேறுபாடுகளைக் கருதிச் சிலருக்கு அதிக ஸெளகரியங்களும், பலருக்குக் குறைந்த ஸெளகரியங்களும், சிலருக்கு மதிப்பும், பலருக்கு அவமதிப் பும், சிலருக்கு லாபங்களும், பலருக்கு நஷ்டங்களும் ஏற் படுத்தியிருப்பது தவறு என்பதும், ஒவ்வொருவரும் சகோதரரைப்போல் பரஸ்பர அன்புடனும், மரியாதையுட னும் வாழ்வதே நியாயம் என்பதும், நவீன ஐரோப்பிய வித்தாந்தங்களிலே மிகவும் முக்கியமான ஸித்தாந்த மாகும். இந்தக் கொள்கைக்கு எல்லா மதங்களும் சார்பாக இருப்பதை உத்தேசிக்கு மிடத்தே, இது நாளடைவில் ஐரோப்பாவில் மாத்திரமின்றி உலக முழுமையிலும் பரி பூர்ணமாக வெற்றிபெறும் என்பதில் ஸ்ந்தேஹமில்லை. இந்த ஸித்தாந்தம் பரிபூர்ண ஜயமடைந்து மனிதருக் குள்ளே ஸஹஜ தர்மமாக ஏற்பட்ட பிறகுதான், மானிடர் உண்மையான நாகரீகம் உடையோராவர். மேலும், மானிடருக்குள்ளே இயற்கையால் ஏற்பட்டி ருக்கும் வர்ண வேற்றுமைகள், உயர வேற்றுமைகள், சரீர பல வேற்றுமைகள் முதலியனவே மாற்ற முடியாதவை. செயற்கையால் உண்டாகிய கல்வி வேற்றுமைகள், செல்வ வேற்றுமைகள், ஜாதி பேதங்கள் முதலியன எளிதாக மாற் றிக்கொள்ளக் கூடியன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல தேசங் களிலும் ஏற்கெனவே பிற்கூறிய வேற்றுமைகளை நீக்குவதற் குப் பலமான முயற்சிகள் நடைபெற்று வந்து நல்ல பயன் களும் ஏற்பட்டு விட்டன. எல்லாருக்கும் கல்வி கற் பித்துக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் முக்கிய மாக வலிமையடைந்து வருகிறது. தேசத்து மக்கள் அத்தனை பேருக்கும் கட்டாயமாகவும் இனமாகவும் கல்வி