பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நடந்து வந்திருக்கின்றபடியால், இந்த மாறுதல் அங்கு அமைப்பது சுலபமாயிற்று. மற்ற ஐரோப்பிய தேசங் களில் முதலாளிகளும் செல்வர்களும் இன்னும் முற்றிலும் பலஹீனமடைந்து போகவில்லை. பெரும்பாலும் அவர்களி டத்திலேயே எல்லாப் பலங்களும் சக்திகளும் அமைந்திருக் கின்றன. அங்கெல்லாம் சோஷலிஸ்ட் கூட்டுறவு வாழ்க் கைக் கட்சி ருஷ்யாவிலுள்ள சக்தியும் பராக்கிரமும் பெற்றுவிடவில்லை. அங்ங்னம் பெறுவதற்கு இன்னும் பல வருஷங்கள் செல்லும் என்றே தோன்றுகிறது. தவிரவும் அங்ங்ணம் சோஷலிஸ்ட் கட்சியார் பலமடைந்தபோதி லும், அந்த பலத்தை உபயோகிப்பது நியாயமில்லையென்று நான் சொல்லுகிறேன். ஏனென்ருல், பிறருடைமையைத் தாம் அபகரித்து வாழவேண்டும் என்கின்ற கெட்ட எண்ண முடையவர்களும் ஸர்வ ஜனங்களும் ஸமான ஸெளகர்யங் களுடன் வாழவேண்டும் என்கிற கருத்து இல்லாத பாவி களும் தம்முடைய கொள்ளை விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு, வாள், பீரங்கி, துப்பாக்கிகளால் அநேகரைக் கொலை செய்து, ஊர்களையும் வீடுகளையும் கொளுத்தியும் அநியாயங்கள் செய்வது நமக்கு அர்த்தமாகக் கூடிய விஷயம். அங்ங்ணமின்றி, எல்லா மனிதரும் உடன் பிறந்த சகோதரரைப்போல் ஆவார்கள் என்றும், ஆதலால் எல்லா ரையும் ஸ்மமாகவும் அன்புடனும் நடத்தவேண்டும் என்றும் கருதுகிற தர்மிஷ்டர்கள் தம்முடைய கருணுதர்மத்தை நிலை நிறுத்தக் கொலை முதலிய மஹாபாதகங்கள் செய்வது நமக் குச் சிறிதேனும் அர்த்தமாகக் கூடாத விஷயம். கொலை யாலும் கொள்ளையாலும், அன்பையும் ஸ்மத்வத்தையும் ஸ்தாபிக்கப்போகிருேம் என்று சொல்வோர் தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன். 'இதற்கு நாம் என்ன செய்வோம்! கொலையாளிகளை அழிக்கக் கொலையைத்தானே கைக்கொள்ளும்படி நேரு