பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 உச்சி தனை முகந்தால் - கருவம் ஓங்கி வளரு தடி: மெச்சி யுனையூரார் - புகழ்ந்தால் மேனி சிலிர்க்கு தடீ. கன்னத்தில் முத்தமிட்டால் . உள்ளந்தான் கள்வெறி கொள்ளு தடீ; உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா உன்மத்த மாகு தடீ; சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது சஞ்சல மாகு தடீ; நெற்றி சுருங்கக் கண்டால் . எனக்கு நெஞ்சம் பதைக்கு தடீ: உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்னெஞ்சில் உதிரங் கொட்டு தடீ! என்கண்ணிற் பாவையன்ருே? கண்ணம்மா! என்னுயிர் நின்ன தன்ருே? சொல்லு மழலையிலே - கண்ணம்மா! துன்பங்கள் தீர்த்திடு வாய்! முல்லைச் சிரிப்பாலே - எனது மூர்க்கந் தவிர்த்திடு வாய். இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ? அன்பு தருவதிலே - உனநேர் ஆகுமொர் தெய்வ முண்டோ? மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் வைர மணிகளுண்டோ? சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல் செல்வம் பிறிது முண்டோ? 10