பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 துன்ப மிலாத நிலையே சக்தி. தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி: அன்பு கனிந்த கனிவே சக்தி, ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி: இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி, எண்ணத் திருக்கும் எரியே சக்தி: முன்புநிற் கின்ற தொழிலே சக்தி, முக்தி நிலையின் முடிவே சக்தி. சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி, சொல்லில் விளங்கும் சு.ரே சக்தி; தீம்பழந் தன்னில் சுவையே சக்தி, தெய்வத்தை எண்னும் நினைவே சக்தி; பாம்பை அடிக்கும் படையே சக்தி, பாட்டினில் வந்த களியே சக்தி; சாம்பரைப் பூசி மலேமிசை வாழும், சங்கரன் அன்புத் தழலே சக்தி. வாழ்வு பெருக்கும் பதியே சக்தி, மாநிலங் காக்கும் மதியே சக்தி; தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி; சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி; வீழ்வு தடுக்கும் விறலே சக்தி, விண்ணே யளக்கும் விரிவே சக்தி; ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி, உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி. சக்தி விளக்கம் ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை அன்னை எனப்பணிதல் ஆக்கம், சூதில்லை காணுமிக்க நாட்டீர்! - மற்றத் தோல்லை மதங்கள் செய்யும் துக்கம்,