பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ஒம், சக்திமிசை பாடல்பல பாடு - ஒம் சக்திசக்தி என்று தாளம் போடு: சக்திதருஞ் செய்கைநிலந் தனிலே சீவ சக்திவெறி கொண்டுகளித் தாடு: 2 ஒம், சக்திதனையே சரணங் கொள்ளு - என்றும் சாவினுக்கொ ரச்சமில்லை தள்ளு. சக்திபுக ழாமமுதை அள்ளு - மது தன்னிலினிப் பாகுமந்தக் கள்ளு. 3 ஒம், சக்திசெய்யும் புதுமைகள் பேசு - நல்ல சக்தியற்ற பேடிகளை ஏசு: சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி - அவள் தந்திடுநற் குங்குமத்தைப் பூசு. 4 ஒம், சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை - இதைச் சார்ந்து நிற்ப தேநமக்கொ ருய்கை; சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை - அதில் தன்னமுத மாரிநித்தம் பெய்கை. 5 ஓம் சக்திசக்தி சக்தியென்று நாட்டு - சிவ சக்தியருள் பூமிதனில் காட்டு; சக்திபெற்ற நல்லநிலை நிற்பார் . புவிச் சாதிகளெல் லாமதனைக் கேட்டு 6 ஒம், சக்திசக்தி சக்தியென்று முழங்கு . அவள் தந்திரமெல் லாமுலகில் வழங்கு: சக்தியருள் கூடிவிடு மாயின் - உயிர் சந்ததமும் வாழுநல்ல கிழங்கு. 7