பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. காளி ஸ்தோத்திரம் (குறிப்பு : அது ஒர் அருமையான கவிதை. யாதுமாக நின்ருய் காளி. எங்கும் நீ நிறைந்தாய். தீது நன்மை எல்லாம் உன்றன் செயல்கள் அன்றி இல்லை. இது கருத்துச் செறிவுள்ள கவிதையாகும். ஸதாசிவ பிரம்மேந்திரர் பாடலைப்போல இதற்கு யாரேனும் ஒருவர் இசையமைத்து உதவினல் மிகவும் நன்ருகயிருக்கும். தமிழ்நாடு இன்னும் குழந்தைப் பருவத்தில் இருக்கிறது. இருந்தாலும், இன்னும் விழிப்புணர்ச்சியோடு இருக்கவில்லை என்று பாரதியார் கூறியுள்ளது இந்த இடத்திலே நினைவுக்கு வருகின்றது. எப்பொழுது கண் திறக்குமோ?) யாது மாகி நின்ருய் - காளி! - எங்கும் நீநி றைந்தாய், தீது நன்மை யெல்லாம் - நின்றன் - செயல்க ளன்றி யில்லை. போதும் இங்கு மாந்தர் - வாழும் - பொய்மை வாழ்க்கை (யெல்லாம், ஆதி சக்தி, தாயே! - என்மீது - அருள் புரிந்து காப்பாய்! 1 எந்த நாளும் நின்மேல்-தாயே! இசைகள் பாடி வாழ்வேன். கந்தனைப் பயந்தாய் - தாயே! - கருணை வெள்ள மானுய்! மந்த மாரு தத்தில் - வானில் - மலையி னுச்சி மீதில் சிந்தை யெங்கு செல்லும் - அங்குன் - செம்மை தோன்றும் [அன்றே! 2 கர்மயோக மொன்றே - உலகில்காக்கு - மென்னும் வேதம்: தர்ம நீதி சிறிதும் . இங்கே - தவற லென்பதின்றி, மர்ம மான பொருளும் நின்றன் - மலர டிக்கண் நெஞ்சம் செம்மையுற்று நாளும் சேர்ந்தே - தேசுகூட வேண்டும். 3