பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 என்ற னுள்ள வெளியில் - ஞானத் - திரவி யேற வேண்டும், குன்ற மொத்த தோளும் - மேருக் - கோல மொத்த வடிவும், நன்றை நாடு மனமும் . நீயெந் - நாளு மீதல் வேண்டும்: ஒன்றை விட்டு மற்ருேர் - துயரில் . உழலும் நெஞ்சம் வேண்டாம்: 4 வான கத்தி ைெளியைக் - கண்டே - மனமகிழ்ச்சி பொங்கி, யானெ தற்கும் அஞ்சேன் - ஆகி - எந்த நாளும்வாழ்வேன்: ஞான லயத்த தம்மா? - உவமை - நானுரைக் கொணுதாம்? வான கத்தி ைெளியின் - அழகை - வாழ்த்து மாறி யாதோ? 5 ஞாயி றென்ற கோளம் . தருமோர் - நல்ல பேரொளிக்கே தேய மீதோர் உவமை - எவரே - தேடி யோத வல்லார்? வாயினிக்கும் அம்மா! - அழகாம் - மதியின் இன்ப ஒளியை, நேயமோ டுரைத்தால் . ஆங்கே - நெஞ்சிளக்க மெய்தும். 6 காளி மீது நெஞ்சம் - என்றும் . கலந்து நிற்கவேண்டும்; வேளை யொத்த விறலும் - பாரில் - வேந்த ரேத்து புகழும், யாளி யொத்த வலியும் - என்றும் - இன்பம் நிற்கும் மனமும், வாழி யீதல் வேண்டும் - அன்னய்! - வாழ்க நின்றன் அருளே!