பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 கொஞ்சம் உடம்பு அசெளகரியமாக யிருந்தபடியால், தனக்கு ஆஹாரம் வேண்டாமென்று நிச்சயித்துப் புருஷனுக்கு மாத்திரமென்று சமைத்தாள். புருஷன் வந்தவுடன், 'நான் இன்றிரவு விரதமிருக்கப் போகிறேன். எனக்கு ஆஹாரம் வேண்டாம்” என்ருன். உடனே பாதி கொதிக்கிற சோற்றை அவள் அப்படியே சும்மா விட்டுவிட்டு அடுப்பை நீரால் அவித்துவிடவில்லை. தங்களிருவருக்கும் உபயோக மில்லாவிடினும், மறுநாள் காலையில் வேலைக்காரிக்கு உதவு மென்று நினைத்து, அது நன்ருகக் கொதிக்கும்வரை காத்திருந்து வடித்து வைத்து விட்டுப் பிறகு நித்திரைக்குச் சென்ருள். அதுபோலவே, கர்மயோகி தான் ஒரு தொழில் செய்யத் தொடங்கி, இடையிலே அது தனக்குப் பயனில்லை யென்று தோன்றில்ை, அதை அப்படியே நிறுத்தி விடமாட்டான். பிறருக்குப் பயன் தருமென்பதைக் கொண்டு, தான் எடுத்த வேலையை முடித்த பிறகே வேறு காரியம் தொடங்குவான். பிரார்த்தனை கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், இளைஞருடைய உத்ஸாகமும், குழந்தையின் ஹ்ருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக் கும்படி அருள் செய்க.