பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில வேடிக்கைக் கதைகள் 1 ஆனைக்கால் உதை ஒரு ஊரில் ஆனைக்கால் வியாதிகொண்ட ஒருவன் பழக்கடை வைத்திருந்தான். அந்தத் தெருவின் வழியாகச் சில பிள்ளைகள் அடிக்கடி போவதுண்டு. போகும்போ தெல்லாம் அவர்களுக்கு அந்தப் பழங்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டு போகவேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று. கிட்டப்போனல் ஆனைக்கால்காரன் தனது பிரம்மாண்டமான காலைக் காட்டிப் பயல்களே, கூடையி லே கைவைத்தால் உதைப்பேன் ஜாக்கிரதை' என்பான். "சாதாரணக் காலால் அடித்தால் கூட எவ்வளவோ நோகிறதே, இந்த ஆனைக் காலால் அடிபட்டால் நாம் செத்தே போவோம்' என்று பயந்து பிள்ளைகள் ஓடி விடுவார்கள். இப்படியிருக்கையில் ஒரு நாள் கடைக்காரன் பராக் காக இருக்கும் சமயம் பார்த்து, ஒரு பையன் மெல்லப் போய்க் கூடையிலிருந்து ஒரு பழத்தைக் கையிலெடுத்தான். இதற்குள் கடைக்காரன் திரும்பிப் பார்த்து, தனது பெரிய காலை சிரமத்துடன் தூக்கிப் பையனை ஒரு அடி அடித்தான். பஞ்சுத் தலையணையால் அடித்ததுபோலே அடி மெத் தென்று விழுந்தது. பையன் கலகலவென்று சிரித்துத் தெரு முனையிலே இருந்த தனது நண்பர்களைக் கூவி, "அடே எல்லோரும் வாருங்கடா! வெறும் சதை; எலும்பில்லை' என்ருன். மனிதர்களெல்லாரும் பல விஷயங்களில் குழந்தைகளைப் போலவே காணப்படுகிருர்கள். வெறுஞ்