பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்கவேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடியே ஆகிருன். இதைக் காரணங்கள் காட்டி ருஜூப்படுத்த வேண்டுமானல், அது ஒரு பத்திரிகைக் குறிப்பின் அளவுக்குள் முடிவுபெற மாட்டாது. ஆனால், அநுபவத்தில் பார்த்துக்கொள்ளலாம். ஒருவன் மனத்தில் நிமிஷத்துக்கு நிமிஷம் தோன்றி மறையும் தோற்றங்களெல்லாம் தியானமாக மாட்டா. புதர்க்கூட்டத்திலே தீப்பிடித்தாற்போல மனத்திலுள்ள மற்றக் கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தைத் தியான மென்று கூறுகிருேம். உள்ளத்தில் இவ்வித அக்னி ஒன்று வைத்துக் கொண்டிருப்போமால்ை, உலகத்துக் காரியாதிகளெல்லாம் நமது உள்ள நிலைக்கு இணங்கிய வாறே மாறுபடுகின்றன. சுவாமிகள் ஆத்ம நாசத்திற்கு இடமான ஒரு வகை இன்பத்தையே தியானமாக வைத்துக்கொண்டிருக்கிருர் கள். உலகத்திலுள்ள மெய்யான இன்பத்தை யெல்லாம் நுகர்ந்து, தமக்கும் பிறர்க்கும் நிலைத்த பயன்கள் விளைவதற் குரிய நற்காரியங்கள் செய்து, உள்ளத்திலுள்ள குழப்பங் களும் துன்பங்களும் நீங்கி, ஸ்ந்தோஷமும் புகழும் பெற வேண்டுமென்ற இச்சை உடையவர்கள். தமது இச்சையை நிறைவேற்றிக்கொள்வது அசாத்தியமன்று. அது இவ் வுலகத்திலேயே இந்த ஜன்மத்திலேயே சாத்தியமாகும். அஃதெப்படி என்ருல், தமது உள்ளத்திலே தீரத் தன்மை, அமைதி, பலம், தேஜஸ், சக்தி, அருள், பக்தி. சிரத்தை இந்த எண்ணங்களையே நிரப்பவேண்டும். "இவற்றை யெல்லாம் நான் எனது உடமையாக் கிக்கொள்வேன். இவற்றுக்கு எதிர்மறையான சிந்தனைகள்