இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
16 4. தாமரைப் பூவினிலே சுருதியைத்
தனி யிருந் துரைப்பாள் பூமணித் தாளினையே - கண்ணிலொற்றிப் புண்ணிய மெய் திடுவோம். (ஒம் சக்தி ஓம் சக்தி ஒம்)
5. பாம்புத் தலைமேலே - நடஞ்செயும்
பாதத்தினைப் புகழ்வோம் மாம்பழ வாயினிலே - குழலிசை வண்மை புகழ்ந் திடுவோம். (ஒம் சக்தி ஓம் சக்தி ஒம்)
6. செல்வத் திருமகளைத் திடங் கொண்டு
சிந்தனை செய்திடுவோம் செல்வ மெல்லாந் தருவாள் . நமதொளி திக்கனைத்தும் பரவும். (ஒம் சக்தி ஓம் சக்தி ஒம்)
9. ஊழிக் கூத்து
[குறிப்பு : இது ஈடு இணையில்லாத ஒர் அற்புதமான கவிதை. ஊழிக்கூத்தை அப்படியே படம் பிடித்து
விடுகிருர் நம் கவிஞர்.
"பொருளும், சந்தமும், லயவொளியும் சேர்ந்து, ஊழிக்கூத்து எவ்வாறு நடக்கிறதென்று பாரதியார்
தெளிவாகக் காட்டுகின்ருர். மிக அற்புதமான கவிதை நயத்தோடு, பொருள்தெரிந்து பாடினல் ஊழிக்கூத்தே கண்முன்பு நடைபெறுவதாகவும். இந்தக் கவிதை அமைந்