பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 நாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி நண்ணித் திகழுமுகந் தந்து - மத வேளை வெல்லு முறைகூறித் - தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும். எண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி யேறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில் பண்ணப் பெருநிதியம் வேண்டும் . அதிற் பல்லோர் துணைபுரிதல் வேண்டும் . சுவை நண்ணும் பாட்டினெடு தாளம் - மிக நன்ரு வுளத்தழுந்தல் வேண்டும் - பல பண்ணிற் கோடிவகை இன்பம் - நான் பாடத் திறனடைதல்.வேண்டும். கல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும் புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப் போத்தைச் சிங்கவே ருக்கல் - மண்ணை வெல்லத் திணிப்புவரச் செய்தல் - என விந்தை தோன்றிட இந்நாட்டை - நான் தொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி சூழும் வீரமறி வாண்மை, கூடுந் திரவியத்தின் குவைகள் - திறல் கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை நாடும் படிக்கு வினை செய்து - இந்த நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி சாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி தாயே! உனக்கரிய துண்டோ? - மதி மூடும் பொய்ம்மையிரு ளெல்லாம் - என முற்றும் விட்டகல வேண்டும்,