பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 தேசத் தீர் இதன் உட்பொருள் கேளிர்; தேவர் வந்து நமக்குட் புகுந்தே நாசமின்றி நமை நித்தங் காப்பார், நம் அகந்தையை நாம் கொன்று விட்டால். 1 அன்புகாண் மரியா மக்த லேநா. ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து: முன்பு தீமை வடிவினைக் கொன்ருல் முன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்: பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை: அன்பெனும் மரியா மக்த லேநா ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே. 2 உண்மை யென்ற சிலுவையிற் கட்டி உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால், வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து வான மேனியில் அங்கு விளங்கும் பெண்மைகாண் மரியா மக்த லேநா, பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து: நுண்மை கொண்ட பொருளிது கண்டீர் நொடியி லிஃது பயின்றிட லாகும். 3 பல்லவி அல்லா, அல்லா. அல்லா! சரணங்கள் பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கன் எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லாவெளி (வானிலே!