பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

டால் மனது உத்ஸாகத்துடனிருக்கும். மனத் தளர்ச்சிக்கு இடம் கொடுக்கலாகாது. கவலை மனிதனை அரித்துக் கொன்றுவிடும். பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிருன்.

இயன்றவரை இந்திரிய இன்பங்கள் கூடாது என்று நான் சொல்லவில்லை. அவை பரமாத்மாவினல் நியமிக் கப்பட்டன. ராமன், கிருஷ்ணன் முதலிய அவதார புருஷர்கள் உலக இன்பங்களை நீக்கித் துறவு கொள்ள வில்லை. ஆனால், இந்திரிய சுகங்களுக்கு வசப்பட்டுப் போகலாகாது. அதனல் தேகபலம் அழிந்து மேற்படி இந்திரிய சுகங்களை நீடித்து அனுபவிக்க வழியில்லாமற் போய்விடும். அறிவுதான் ராஜா, மனமும், இந்திரியங்களும் உடம்பும் அறிவுக்கடங்கி வாழவேண்டும்; இல்லாவிட்டால் அவற்றுக்கே கெடுதியுண்டாகும்.

எனவே, மனவுறுதி, ஸ்ந்தோஷம், உலகை நடத்தும் சக்தி நமக்கு நன்மை செய்யுமென்ற நம்பிக்கை, சரீர வுழைப்பு முதலிய நற்குணங்களைக் கைக்கொண்டு ஊக்கத்தை வழக்கப்படுத்தவேண்டும்.

உடம்பிலே நோயில்லாமல் வலிமையுடன் இங்கே நூற்றாண்டு வாழலாம்.

24. உலக வாழ்க்கையின் பயன்

(குறிப்பு : உலக வாழ்க்கையிலே எல்லா உயிர் களும் தேடுவது இன்பம். இந்த இன்பத்தை எவ்வாறு எய்தலாம் என்று இக்கட்டுரையிலே வழி சொல்லுகிரு.ர்.