பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

ஆபேலிடம் விரோதமாய் ஆபேலேக் கொன்றுவிட்டாளும் அப்போது . கடவுள் காயினை நோக்கி-உன் சகோதர கிைய ஆபேல் எங்கே?’ என்று கேட்டாராம். அதற்குச் காயீன் எனக்குத் தெரியாது. சகோதரனுக்கு நான் காவு லாளியோ?” என்றாளும்.

அதுபோல, உலகத்துக்குச் செல்வர் ஸகல ஜனங்களுக் கும் பொதுவாகிய பூமியை தங்களுக்குள்ளே பங்கிட் டெடுத்துக் கொண்டு பெரும் பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா?’ என்று கேட்டால், அவர்களுடைய கர்மத் தினல் அவர்கள் ஏழையாயிருக்கிரு.ர்கள். அதற்கு நாங்களா பொறுப்பு? நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா? என்று கேட்கிறார்கள். உலகம் மாறுகிறது. ஏழைகளுக்கு நியாயம் செய்யவேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் பொருளாளிகள் ஒரு சபை கூடி, அந்தக் கிாாமத்திலுள்ள ஏழைகளின் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய யோசனைகள் பண்ணி நிறைவேற்ற வேண்டும். அன்பினால் உலகத்தின் துயரங்களை எளிதாக மாற்றிவிட லாம். அங்ஙனம் செய்யாமல் அஜாக்கிரதையாக இருந்தால் ஐரோப்பாவைப்போல் இங்கும், ஏழை செல்வர் என்ற பிரிவு பலமடைந்து, விரோதம் முற்றி, அங்கு ஜனக்கட்டு சிதறும் நிலைமையிலிருப்பது போல், இங்கும் ஜன சமுஹம் சிதறி, மஹத்தான விபத்துக்கள் நேரிட இடமுண்டாகும்

பொருளாளிகள் இடைவிடாத உழைப்பையும் அன்பையும், ஸ்மத்துவ நினைப்பையும் கைக்கொண்டால், உலகத்தில் அநியாயமாக உத்பாதங்கள் நேரிட்டு உலக மழியாமல் காப்பாற்ற முடியும். பராசக்தி மனுஷ்ே ஜாதியை அன்பிலும் ஸ்மத்துவத்திலும் சேர்த்து நலய செய்க.