இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2.
14
சனப் பறையறகளேனும்-அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவ ரன்றாே?
சீனத்த ராய்விடு வாரோ?-பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?
(வந்தே)
ஆயிர முண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி?-ஒர்
தாயின் வயிற்றிற் பிறந்தோர்-தம்முட்
சண்டை செய்தாலும் சகோதர ரன்றாே?
(வந்தே)
ஒன்று பட்டாலுண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கி லனவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
(வந்தே)
எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கு மந்த நிலை பொதுவாகும்: முப்பது கோடியும் வாழ்வோம்-விழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்.
(வந்தே)
புல்லடிமைத் தொழில் பேணிப்-பண்டு
போயின நாட்களுக் கினி மனம்நாணித்
தொல்லை யிகழ்ச்சிகள் தீர-இந்தத்
தொண்டு நிலைமையைத் துரவென்று தள்ளி.
(வந்தே)