பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

நேர்ந்திருக்கிறது. அங்கு நம்மவர் உத்திரவுச் சீட்டில்லாமல் யாத்திரை செய்யக்கூடாது. இரவு வேளையில் வெளியே சஞ்சரிக்கக்கூடாது. நகரங்களுக்கு நடுவே குடியிருக்கச் கூடாது. ஒதுக்கமாக நமக்கென்று கட்டப்பட்டிருக்கும் சேரி களில் வசிக்க வேண்டும். ரயில் வண்டியில் மூன்றவது வகுப்பிலேதான் ஏறலாம்; முதலிரண்டு வகுப்புகளில் ஏறக் கூடாது. நம்மை ட்ராம் வண்டியிலிருந்து துரத்துகிறார்கள் ஒற்றையடிப் பாதையினின்றும் கீழே தள்ளுகிறார்கள் ஹோட்டல்களில் நுழையக் கூடாதென்கிறார்கள். பொது ரஸ்தாக்களில் நடக்கக் கூடாதென்று தடுக்கிரு.ர்கள் நம்மைக் கண்டால் காறி உமிழ்கிறார்கள். ‘ஹாஸ் என்று சீத்காரம் பண்ணுகிறார்கள். நம்மை வைகிரு.ர்கள் சபிக்கிறார்கள். மனுஷ்ய ஜந்துக்களினல் சகிக்கக்கூடாத இன்னும் எத்தனையோ அவமானங்களுக்கு நம்ம்ை உட்படுத்துகிறார்கள். ஆகையால் நம்மவர் இந்த நாட்டி லேயே இருந்து பஞ்சத்திலும் கொள்ளை நோயிலும் அழுக் திட்டாலும் பெரிதில்லை. நமது ஸ்வதந்திரங்களை வெள் நாடுகளில் அன்னியர் காலின்கீழே போட்டு மிதிக்காதபடி ராஜாங்கத்தாரால் நம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் நம்மவர் வேற்று நாடுகளுக்கு குடியேறிப் போகாமல் இங்கிருந்து மடிதலே நன்று’ என்றார் என்ன கொடுண் யான நிலை பார்த்தீர்களா?

ஆனல், சகோதரிகளே, தென் ஆப்பிரிக்காவித் மாத்திரமே இவ்விதமான கொடுமைகள் நடக்கின்றதி என்று நினைத்து விடாதீர்கள்!

சகோதரிகளே! ஒளவையார் பிறந்தது தமிழ்நாட்டில் மதுரை மீனகதியும், அல்லி அரசாணியும், நேற்று மங்கி மாளும் அரசுபுரிந்த தமிழ் நாட்டிலே நம்முடைய நிலைன் தென்னப்பிரிக்காவில் ஹிந்து தேசக் கூலிகளுடைய நிலை :