பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 எது எப்படியாலுைம்,இந்த தினத்தில், இந்த கூடிணத்தில் நாமெல்லோரும் பறையர், பார்ப்பார் எல் லோரும் ராஜாங்க விஷயத்தில் ஒரே ஜாதி. தேசீயக் கல்வி, மனுஷ்யஜாதியின் விடுதலை, இவ் விரண்டு பெருங் காரியங்களைத் தொடங்கு வதற்கும் இப்போது காலம் மிகவும் பொருத்தமாக வாய்த்திருக் கிறது. இவற்றுள் மனுஷ்யஜாதியின் விடுதலை நிறைவேற வேண்டுமாயின் அதற்கு பாரத தேசத்தின் விடுதலை இன்றி யமையாத மூலாதாரமாகும். இங்ங்ணம் பாரத தேசம் விடுதலை பெற வேண்டு மாயின் அதற்கு தேசீயக் கல்வியே ஆதாரம். 'அ............ ன்' மேலே காட்டிய குறியின் பொருள் யாது? தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டு மாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள். ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரகரம் செய்யவேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல் லாம் தமிழ் மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவது மன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்; ஸ்லேட்' பென்ஸில்' என்று சொல்லக்கூடாது.