பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்கண்ட கட்டுரையை யொட்டி பிரம்மழரீ. மு. இராகவையங்காரவர்களுக்கு எழுதிய லிகிதம். இந்தியா ஆபீஸ், பிராட்வே, மதருஸ், 18th October 1907. அநேக நமஸ்காரம். ஒவ்வொரு காலத்துச் சோம்பர் மிகுதியாலும், ஒவ் வொரு காலத்தே முயற்சி மிகுதியாலும், தங்களைப் போன்ற பெரியோர்களுக்கு அடிக்கடி கடிதங்களெழுதிப் புனிதத் தன்மை பெறுவதற்கு அவகாசமில்லாதவனக இருக் கின்றேன். சென்ற முறை வெளிவந்த 'செந்தமிழ்’ப் பத்திரிகை யிலே தாங்கள் எழுதியிருக்கும் "வீரத்தாய்மார்கள்” என்ற அற்புத உரையைக் கண்டு மகிழ்ச்சி பூத்து அம் மகிழ்ச்சி யைத் தமக்கு அறிவிக்கும் பொருட்டாக இக் கடிதம் எழுதலானேன். தாங்கள் பாண்டித்தியத்தை நான் புகழ வரவில்லை. அதனை உலகமறியும். தங்களுடைய பரிசுத்த நெஞ்சிலே எழுந்திருக்கும்."ஸ்வதேச பக்தி" என்ற புது நெருப்பிற்குத் தான் நான் வணக்கம் செய்கிறேன். 'காலச் சக்கரம் சுழலுகிறது”என்று அவ்வுபந்நியாசத் தின் இறுதியிலே குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆம்! காலச்