பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது. பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது. பெண்ணை அடைத்தவன் கண்ணே அடைத்தவன் என்றெழுது. தொழில்கள், தொழில்கள், தொழில்கள் என்று கூவு. தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்முகச் சிரைப்பவன் மேற்குலத்தான் என்று கூவு. வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக. முயற்சிகள் ஓங்குக. ஸங்கீதம், சிற்பம்,யந்திரநூல், பூதநூல், வானநூல் இயற்கை நூலின் ஆயிாம் கிளைகள் இவை தமிழ்நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு. சக்தி, சக்தி, சக்தி என்று பாடு. தம்பி- நீ வாழ்க. 峯 事 状 உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனேஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை உயிர் கொண்டது. இன்று உன் விலாஸ்த்துக்கு நாட்டுப் பாட்டுக்கள் அனுப்புகிறேன். அவற்றைப்பகுதி பகுதியாக உனது பத்திரிகையிலும் ஞான பானுவிலும் ப்ரசுரம் செய்வித்திடுக. புதுமைப்பெண்” என்ருெரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவருமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும், எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. தம்பி- உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை? நீ வாழ்க. உனதன் புள்ள, பாரதி