பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ե5 விகிதக்காரர் பரிதாபப்படுகிரு.ர். நமது ஜனத்தலைவர்கள் இங்கிலீஷில் யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்தினால் ஒழிய நமது பாஷை மேன்மைப்பட இடமில்லே என்று அவர் வற்புறுத்திச் சொல்லுகிரு.ர். மேற்படி லிகிதக்காரர், தமது கருத்துக்களை இங்கிலீஷ் பாஷையில் எழுதி வெளியிட்டிருப்பது போலவே தமிழில் எழுதித் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரப்படுத்தி இருந்தால் நன்ருக இருந்திருக்கும். ஸ்பைகள், ஸங்கங்கள், பொதுக் கூட்டங்கள், வருஷோத்ஸவங்கள், பழஞ்சுவடிகள் சேர்த்து வைத்தல், அவற்றை அச்சிடல் இவையெல்லாம் பாஷை வளர்ச்சிக்கு நல்ல கருவிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனல் தமிழ் மக்கள் தமது மொழியை மேன்மைப்படுத்த விரும்பினல் அதற்கு முதலாவது செய்யவேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது கால விசேஷத்தால் நமது தேசத்திலே விசாலமான லெளகீக ஞானமும் அதனைப் பிறருக்கு உபயோகப்படும்படி செய்வதற்கு வேண்டிய அவகாசம் பதவி முதலிய ஸெளகர்யங்களும் படைத்திருப்ப வராகிய இங்கிலீஷ் படித்தவக்கீல்களும், இங்கிலீஷ் பள்ளிக் கூடத்து வாத்தியார்களும், தமது நீதி ஸ்தலங்களையும், பள்ளிக் கூடங்களையும் விட்டு வெளியேறியவுடனே இங்கிலீஷ் பேச்சை விட்டுத் தாம் தமிழரென்பதை அறிந்து நடக்கவேண்டும். பந்தாடும்போதும், சீட்டாடும்போதும், ஆசாரத் திருத்த ஸ்பைகளிலும், வர்ணுச்ரம ஸ்பைகளிலும் எங்கும், எப்போதும், இந்தப் "பண்டிதர்கள் இங்கிலீஷ் பேசும் வழக்கத்தை நிறுத்தினல், உடனே தேசம் மாறுத லடையும். கூடியவரை, இவர்கள் தமிழெழுதக் கற்றுத் கொள்ள வேண்டும். இவர்கள் அத்தனை பேரும் தமிழ் பத்திரிகைகளில் லிகிதங்களாகவும், இவர்கள் எழுதுகிற கதை, காவியம், விளையாட்டு வார்த்தை, வினை வார்த்தை, சாஸ்திர விசாரணை, ராஜ்ய நீதி எல்லாவற்றையும் தமிழில்