பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பழக்கம் நமது பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது. முதலாவது, நீ எழுதப்போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினல் சொல்விக்காட்டு: அவனுக்கு நன்ருக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக்கொண்டு பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ் நாட்டிற்குப் பயன்படும். உனக்கு இஹபர கூேடிமங்களுக்கு இடமுண்டாகும். இல்லாது போனல், நீயும் சிரமப்பட்டு மற்றவர்களுக்கும் பயனில்லாமல் போகிறது. சில சமயங்களில் சில பத்திரிகை களே வாசித்து விட்டு, நான்:- "ஐயோ, இவ்வளவு காயிதத்தில் எத்தனைய்ோ உண்மைகளும், எத்தனையோ ஆச்சரியங்களும், எத்தனையோ சந்தோஷங்களும் எழுத வாமே? என்று எண்ணி வருத்தப்படுவதுண்டு.