பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. தமிழ் நாட்டிலே புஸ்தகப் பிரசுரம் தமிழ் நாட்டிலே புஸ்தகம் எழுதுவோரின் நிலைமை இன்னும் சீராகவில்லை. பிரசுரத் தொழிலை ஒரு வியாபார மாக நடத்தும் முதலாளிகள் வெளிப்படவில்லை யாதலால், சங்கடம் நீங்காமலிருக்கிறது. புதிய புஸ்தங்களைப்படித்துப் படித்து பயன்படுமா படாதா வென்று தீர்மானம் செய்ய வேண்டும். நன்ருகவிலேயர்குமா விலையாகாதா என்பதை ஊகித்தறிய வேண்டும். ஆசிரியரிடமிருந்து புஸ்தகத்தை முன் விலையாகவோ, வேறுவித உடன்பாடாகவோ,வாங்கிக் கொண்டு தாம் கைம்முதல் போட்டு அச்சிட்டு லாபம் பெற வேண்டும். இந்த வியாபாரத்தை நமதுதேச முதலாளிகள் தக்கபடி கவனியாமலிருப்பது வியப்பை உண்டாக்குகிறது. புஸ்தகங்கள் வெளிவரத்தான் செய்கின்றன. பெருந்தொ கையான ஜனங்கள் வாங்கிப் படிக்கத்தான் செய்கிரு.ர்கள். ஒரு ஒழுங்கான பிரசுர வியாபாரம் நடந்தால் ஜனங்களுக்கு நல்ல புஸ்தகங்கள் கிடைக்கும். இப்போது அச்சிடப் பண முள்ளவர் எழுதும் புஸ்தகங்களே பொது ஜனங்களுக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பழைய புஸ்தகங்களிலே ஆச்சரியமானவை பல எழுதப்பட்ட காலத்தில், ஆசிரியர் தனவந்தராக இருந்ததில்லை. மேன்மேலும் ஊக்கத்துடன் நடத்தினல், பிரசுர வியாபாரத்தில் நிறைய லாபம் உண் டாகுமென்பதில் சந்தேகமில்லை.