பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 சொல்லும் பொய்ப் புராணங்களிலே விஷ்ணு லக்ஷ்மியை அடித்தாரென்முவது, சிவன் பார்வதியை விலங்கு போட்டு வைத்திருந்தாரென்ருவது கதைகள் கிடையா. சிவன் ஸ்திரீயை உடம்பிலே பாதியாகத் தரித்துக்கெண்டார். விஷ்ணு மார்பின் மேலே இருத்தினர். பிரம்மா நாக்குக் குள்ளேயே மனைவியைத் தாங்கி நின்ருர், ஜகத்திற்கு ஆதாரமாகிய பெருங் கடவுள் ஆண் பெண் என இரண்டு கலைகளுடன் விளங்குகிறது. இரண்டும் பரிபூரணமான சமானம். பெண்ணை அணுவளவு உயர்வாகக் கூறுதலும் பொருந்தும். எனவே, இன்று தமிழ் நாட்டில் மாத்திரமே யல்லாது பூமண்டல முழுதிலும், பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்தி வாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை கலியுகத்திற்குப் பிறப்பிடம். இந்த விஷயம் தமிழ் நாட்டில் பல புத்திமான்களின் மனதிலே பட்டு, பெண் விடுதலைக் கவி தமிழ் நாட்டின் கண்ணே பலமடைந்து வருவதை நோக்குமிடத்தே எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியுண்டாகிறது. இந்த விஷயத்திலும் தமிழ் நாடு பூமண்டலத்துக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குமென்பதில் ஆக்ஷேபமில்லை. அடுத்த விஷயம் மத பேதங்களைக் குறித்தது. இதில் பாரத தேசம்-முக்கியமாகத் தமிழ்நாடு-இன்று புதிதாக அன்று, நெடுங்காலமாக தலைமையொளி வீசிவருதல் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ராமானுஜர் தமிழ் நாட்டில் பிறந்தவர் அன்ருே? ஆழ்வார்களும் நாயன்மார் களும் அவதாரம் புரிந்தது தமிழ் நாட்டிலன்ருே? பறை யனைக் கடவுளுக்கு நிகரான நாயனராக்கிக் கோயிலில்