பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. புனர் ஜன்மம் மலைப் பாம் புக் கதை கேட்டிருக்கிறீர்களா அல்லவா? அதன் வாலிலே தீப்பற்றி எரியுமாம். மலைப் பாம்பு சுகமாக குறட்டைவிட்டுத் துரங்குமாம். செல்லரித்துக்கொண்டு போனது நமது ஸ்மரணையிலே தட்டவில்லே. அத்தனை கர்வம், அத்தனை கொழுப்பு, அத்தனை சோம்பர். நமது கவிதையிலே ஆனந்தம் குறையத் தொடங் கிற்று. ருசி குறைந்தது. கரடுமுரடான கல்லும் கள்ளி முள்ளும் போன்ற பாதை நமது கவிகளுக்கு நல்ல பாதை யாகத் தோன்றலாயிற்று. கவிராயர் "கண்" என்பதை "சக்கு என்று சொல்லத் தொடங்கினர். ரஸம் குறைந்தது: சக்கை அதிகப்பட்டது. உண்மை குறைந்தது; பின்னல் திறமைகள் அதிகப்பட்டன. சவியுறத்தெளித்து தண்ணென்ருெழுக்கமும் தழுவிச் சான்ருேர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார் என்று கம்பன் பாடியிருக்கிருன். "சவி என்பது ஒளி; இது வடசொல்: கம்பன் காலத்தில் அதிக வழக்கத்திலிருந்தது போலும். "ஒளி பொருந்தும்படி தெளிவுகொண்டதாகி தண்ணெற்ற (குளிர்ந்த) நடையுடையதாகி, மேலோர் கவிதையைப் போலக் கிடந்தது கோதாவ்ரி நதி' என்று கம்பன் வர்ணனை செய்கிருன். எனவே, கவிதைகளில் ஒளி தெளிவு, குளிர்ந்த நடை மூன்றும் இருக்கவேண்டு மென்பது கம்பனுடைய மதமாகும். இதுவே நியாய மான கொள்கை.