பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 லும் கணக்கே பிரதானம்' என்று முடிவு செய்து கொண் டார்கள். இன்பமும் கணக்கும் சேர்ந்திருக்கவேண்டும். இன்பமில்லாமல் கணக்கு மாத்திர மிருந்தால், அது பாட்டாகாது. இடைக் காலத்தே நமக்குச் நேர்ந்த கேட்டிற்கு ஸங்கீதத்தையும் கவிதையையும் திருஷ்டாந்தங்காட்டி னேம். ஆனால், இந்தக் கேடு அவை இரண்டையும் மாத்திரமே தொட்டு நிற்கவில்லை. நமது சித்திரத் தொழில், நமது சிற்பம், நமது ஜனக்கட்சி, ஜன நீதி, நமது சாஸ்திரம், தலை, கால்- எல்லாவற்றிலும் இந்தக் கேடு பாய்ந்துவிட்டது. நோய் முற்றிப்போயிருந்தது. பராசக்தி நல்ல வேளையில் நமக்குள் உயர்ந்த வைத்தியர் பலரை அனுப்பினள். அவளுக்கு நம்மீது கிருபைவந்து விட்டது. எனவே, பிழைத்தோம். ஆலுைம், இம்முறை பிழைத்தது புளர்ஜன்மம். இந்தப் புனர் ஜன்மத்தின் குறிகளே எல்லாவற்றிலும் காண்கிருேம். பாரத ஜாதி புதிதாய்விட்டது. தற்காலத்திலே பூமண்டலத்து மஹா கவிகளில் நமது ரவீந்த்ரநாதர் ஒருவர் என்று உலகம் ஒப்புக்கொள்ளுகிறது. இதுவரை ஐரோப்பிய பண்டிதர் கள் இயற்கை நூல் (ப்ரகிருதி சாஸ்திரம்) தமது விசேஷ உடமை என்று கருதி வந்தார்கள்: இப்போது நமது ஜகதீச சந்திர வஸ் அந்த வழியில் நிகரற்ற திறமை பெற்றவர் என்பதை மேல் நாட்டு வித்வான்களில் ஒப்புக் கொள்ளாதார் யாருமில்லே. தமிழ் நாட்டிலே புதிய கவிதையும் சாஸ்திர ஒளியும் விரைவிலே தோன்றும்; உலகம் பார்த்து வியப்படையும். செத்துப் பிழைத்தோம். ஆனல் உறுதியாக நல்ல வயிரம் போலவே பிழைத்து விட்டோம், புதிய ஜன்மம் நமக்கு மிகவும் அழகான ஜன்மமாகும்படி தேவர்கள் அருள் புரிந்திருக்கிருர்கள். அதன் பொருட்டு அவர்களே இடைவிடாமல் வாழ்த்துகின்ருேம்.