பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

أنهُ نف கிறது. வித்வான் வாதாபி கணபதிம் என்று ஆரம்பஞ் செய்கி.மூர். ராமநீ மான மெவரு மரியாத காதுரா' வரமு லொஸ்கி'......ஐயையோ, ஐயையோ, ஒரே கதை. எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்திற்குப் போ, எந்த வித்வான்’ வந்தாலும், இதே கதைதான். தமிழ் நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால், திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாட்டுக் களை வருஷக் கணக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிருர்கள். தோற் காது உள்ள தேசங்களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். "பூர்வீக மஹான்களுடைய பாட்டுகளே மறந்து போய்விட வேண்டும்' என்பது என்னுடைய ககதியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாடவேண்டும். பதங்களைப் பிழையாக உச்சரிக்கக் கூடாது. பதங்களை வாய்விட்டுத் தெளிவாகச் சொல்லவேண்டும். விழுங்கி விடக்கூடாது. பத்து முப்பது கீர்த்தனங்களேயே ஓயாமற் பாடி ஸங் கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்து விடக்கூடாது. புதிய புதிய கீர்த்தனங்களை வெளியே கொண்டுவர வேண்டும். இப்போது ஸங்கீத வித்வான்களிலே தலைமைப் பட்டிருப்போர் தமிழிலே புதிய மெட்டுக்களில் கீர்த்தனங் கள் செய்ய முயல வேண்டும். நவரஸங்களின் தன்மைகளே யும், இன்னின்ன விதங்களிலே பாடினுல், இன்னின்ன ரலங்கள் உண்டாகும் என்பதையும் கற்றுத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். "பூர்வ காலத்து மஹான்களுக்குத் தெய்வப் பிரஸ்ாத மிருந்தது. எங்களுக்கில்லேயே. என்ன செய்வோம்? என்று புதிய வித்வான்கள் புதிய கீர்த்தனங்கள் அமைப்ப திலே பின்வாங்கக்கூடாது. தெய்வங்கள் இறந்துபோக வில்லை. இப்போதும் அவற்றை உபாஸ்னே செய்து அவற்