பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கண்ணன்-என் காதலன் (பிரிவாற்ருமை) ஆண்ச் முகமறந்து போச்சே-இதை ஆரிடம் சொல்வேனடி தோழி? நேச மறக்கவில்லை நெஞ்சம்-எனில் நினைவு முகமறக்க லாமோ? கண்ணில் தெரியுதொரு தோற்றம்-அதில் கண்ண னழகுமுழு தில்லை; நண்னு முகவடிவு காணில்-அந்த நல்ல மலர்ச்சிரிப்பைக் காணுேம். 2 ஒய்வு மொழிதலுமில் லாமல்-அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம்; வாயு முரைப்பதுண்டு கண்டாய்-அந்த மாயன் புகழினையெப் போதும். .5 கண்கள் புரிந்துவிட்ட பாவம்-உயிர்க் கண்ண னுருமறக்க லாச்சு: பெண்க ளிடத்திலிது போலே-ஒரு பேதையை முன்புகண்ட துண்டோ? 4 தேனை மறந்திருக்கும் வண்டும்-ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும்- ந்த வைய முழுதுமில்லே தோழி! 5 கண்ணன் முகமறந்து போகுல் - இந்தக் க்ண்க ளிருந்தும் பயனுண்டோ? வண்ணப் படமுமில்லை கண்ட -இனி வாழும் வழியென்னடி தோழி? 6 சிறப்புறப் பாடியவர் : சங்கீதகலாநிதி செம்மங்குடி பூஜீநிவாசய்யர் அவர்கள்.