பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதனால் இந்தியா என்ற வார இதழை இவர் தனியாக நடத்தத் தொடங்கினார். அதற்கு நிறையப் பணம் வேண்டுமல்லவா? பெரிய செல்வ வந்தர்களான மண்டயம் குடும்பத்தார் இந்தப் புதிய முயற்சிக்குப் பொருள் உதவி செய்தார்கள். அதனால் இந்தியா வார இதழ் நன்கு நடைபெற்றது.

பாரதியார் தமது விருப்பம்போல எழுதினார். தமிழர்களைத் தட்டி எழுப்பினார். சொந்த நாட்டில் பிரர்க்கு அடிமை செய்தே துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்-

எந்த நாட்டிலும் இந்த அநீதிகள் ஏற்குமோ- தெய்வம்-பார்க்குமோ?

என்று தேச பக்தர் வ. உ. சிதம்பரம்பிள்ளை கூறுவதாக பாரதியார் ஓர் உணர்ச்சி மிகுந்த பாட்டுப் பாடியிருக்கிறார். இந்த சிதம்பரம் பிள்ளையைத்தான் கப்பலோட்டிய தமிழன் என்று நாம் போற்றுகின்றோம்.

8