பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளவையாரைப் போலவே ஒரு புதிய ஆத்திசூடி செய்ய வேண்டுமென்று பாரதியாருக்கு ஆசை உண்டாயிற்று.

பாரதியார் உயிரோடு வாழ்ந்த காலத்திலே நமது நாட்டு மக்கள் அந்நிய ஆட்சியை எதிர்த்து நிற்காமல் கோழைகளாக இருந்தார்கள் அல்லவா? அவர்களுக்கு வீர உணர்ச்சி ஊட்டவேண்டுமென்று நினைத்து தமது புதிய ஆத்திசூடியில்

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி

என்று இவ்வாறு எழுதியிருக்கிறார். குழந்தைகள் எல்லாம் இளமையிலேயே இவற்றையும் படித்து வீர உணர்ச்சி பெற வேண்டும் என்பது பாரதியாரின் ஆசை.

மேலும் அடிமை விலங்கை உடைத்தெரிய என்ன வெல்லாம் முக்கியமாகத் தேவையோ அவற்றையெல்லாம் பாரதியார் தமது புதிய ஆத்திசூடியில் தந்திருக்கிறார். ஒரு சிலவற்றை மாதிரிக்காக இங்கு காண்பிக்கிறேன்.

உடலினை உறுதிசெய்
ஒற்றுமை வலிமையாம்
கொடுமையை எதிர்த்து நில்
தேசத்தைக் காத்தல் செய்

பொய்ம்மையை இகழ்
போர்த் தொழில் பழகு
வீரியம் பெருக்கு

21