பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவ்வாறு உயர்ந்த சிறப்புடைய பலரையும் வா வா என்று வரவேற்கிறார். நீங்கள் எல்லாரும் இப்படி ஆக வேண்டும் என்பது பாரதியாருடைய ஆசை.

போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும் என்று இந்தப் பாடலுக்கு இவர் தலைப்புக் கொடுத்திருக்கிறார். இதுவும் ஒரு நாளும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய பாட்டு.

அதை முழுமையாக நீங்கள் மனப்பாடம் செய்து கொள்வது நல்லது. அத்துடன் பாரதியார் எவற்றையெல்லாம் விரும்ப வில்லையோ அவற்றைப் போக்க முயல வேண்டும். அவர் விரும்புவது போல இளைஞர்கள் தோன்றி விட்டால் நம்நாடு மிகவும் உயர்ந்து விளங்கும்.

முன் காலத்திலே நமது நாடு எல்லாரும் போற்றும் படியாக இருந்தது. அந்நியர்களுக்கு அடிமைப்பட்டதால் அந்தச் சிறப்பெல்லாம் மங்கிவிட்டது. இப்பொழுது நமக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. இனி-

23