பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கள் நாடு பழம் பெருமை வாய்ந்தது. இதன் கோயில்கள், சிலைகள், ஓவியங்கள், சங்கீதம், நாட்டியம் எல்லாம் மிகவும் உயர்ந்தவை.

இவற்றிக்கு இணையான கலைகள் உலகத்தில் வேறெங்கும் இல்லை. நாங்கள் பெருமை வாய்ந்த நாகரிகமும் பண்பாடும் உடையவர்கள். எங்கள் நாட்டை அடிமை நாடாக இருக்க இனிமேல் விடமாட்டோம் என்று மக்கள் அலைபோலத் திரண்டு எழுந்தார்கள் எவ்விதமான தியாகத்தையும் செய்ய முன்வந்தார்கள்.

இப்படியெல்லாம் தமிழ் மக்களுக்கு விழிப்பையும் உணர்ச்சியையும் ஊட்டியவர்களில் முக்கியமானவர் பாரதியார்தான். அவருடைய பாடல்களைக் கேட்டு மக்கள் தோளைத் தட்டிக் குதித்து எழுந்தார்கள்.

பாரதியார் தமது பாடல்களால் இந்த விழிப்பை உண்டாக்கினார். மேலும் இவர் பேசிய பேச்சைக் கேட்கும் மக்கள் ஊக்கம் கொண்டார்கள். இவர் நடத்திய பத்திரிகையின் மூலமாகவும் இவர் தேச பக்தியை உண்டாக்கினார்.

இன்று தமிழ் நாட்டு மக்கள் எல்லாம் இவருடைய திருநாளைக் கொண்டாடுகிறார்கள். இவருடைய பாடல்களையும், மற்ற எழுத்துக்களையும் போற்றுகிறார்கள். இவர் பெரியவர்களுக்கு மட்டும் பாட்டு எழுதவில்லை. குழந்தைகளுக்கும் அழகான பாடல்கள் எழுதியிருக்கிறார்.

இப்படிபட்ட சிறந்த கவிஞரின் வாழ்க்கையைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

முதலில் பூ மொக்காக இருக்கிறது. பிறகு அது மலராகின்றது. அப்படி மலரும் போது மிக அழகாக

4