பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 திருக்கிருர்கள். அவர்கள் தங்கள் தலைநிறைய திவ்விய மான கொள்கைகளேஅடைத்துவைத்துக்கொண்டிருக்கிருர் கள். அக் கொள்கைகளை விற்றும் ஜீவிக்கிரு.ர்கள். பொதுப் பீடங்களினின்றும் உலகறிய அவற்றை ஸாங்கோபாங்க மாகப் போதிக்கிருர்கள். பொது ஜனங்கள் அக் கொள்கை களைக் கேட்டுப் பிரமித்து, இவ்வரிய கருத்துக்களுக்கு ஆலயமாக விருக்கும் இவர்கள் மனமே மனம், இம் மஹான்கள் அவதார புருஷர்களோ என்று தம்மைப் போற்றும்பொழுது, அப் பூஜிதையையும் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து வெறியடைகிருர்கள். ஆனல் அவர்களைப் பின் தொடர்ந்து அவர்களின் வீட்டிற்குச் செல்வோமானல், அங்கே எலும்புந் தோலும் குப்பையும் சகலவிதமான அழுக்குகளும் நிறைந்து கிடக்கின்றன. இம் மஹான் களின் செய்கைகள் அவர் கொண்ட கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமாய் இருக்கின்றன. தட்டிச்சொல்ல ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டம்’ என்ற படி பேசிவிட்டு, ஆபத்து வந்த காலத்தில் நான் சொன்ன படி நீங்கள் செய்யவேண்டும். நான் செய்கிறபடி நீங்கள் செய்யப்படாது' என்று ஜனங்களை ஏமாற்றுகிருர்கள். அதிலும் கேடாய், தங்களுடைய கொள்கைகளே ஜால வித்தைக்காரன் போல் மாற்றிவிடுகிருர்கள். இம் மஹா பாதகர்களால் நம் தேசத்திற்கு விளையும் தீமைகள் கணக்கில அடங்கா. ஏனெனில் இவர்களைப் பார்த்து அநேகம் அறிவில்லாத மனிதர்கள் செல்லக் கூடாத மார்க்கங்களிற் சென்றுவிடுகிருர்கள். நமக்குக் கொள்கை வேண்டுமேயல்லாது ஆள் வேண்டியது அவசிய மில்லை. ஒருவன் தான் பறையறையும் நல்லதோர் கொள் கையை விட்டுவிட்டு விலகி நடப்பானைல் அப்பொழுது நாம் அவனைக் கொண்டாடுவது மதியினம். அவனை எவ் வகையாலும் நாம் இகழ்ச்சி செய்தே நடத்த வேண்டும்.