பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 மென்று நம்மவர் கிராமந்தோறும் சபைகள் கூடி கூ! கூ!" என்று பெரிய சப்தம் போடவேண்டும். திராவிடக் கட்சியார் என்றும், இஸ்லாமியக் கட்சியார் என்றும் யாரோ சிலர் செய்யும் பொய் மேளக் கச்சேரியை நாம் இகழ்ந்து, நகைத்து, காங்கிரஸ் முஸ்லீம் சங்கங்களே தேசத்துக்குப் பொது என்பதை ஒரே வார்த்தையாக எங்கும் நிலை நிறுத்த வேண்டும். காங்கிரஸ் முஸ்லீம் சபை களை எதிர்த்து, நமக்கு சுயராஜ்யம் வேண்டாமென்று சொல்லும் ஸ்வதேச விரோதிகளை அடக்கிவிட்டு, நாம் இப்போதே ஸ்வராஜ்யம் கேட்கும்படி நமது பிரதிநிதி களாகிய காங்கிரஸ் முஸ்லீம் சபையாரைத் துண்ட வேண்டும். மந்திரி மாண்டேகு சென்னைக்கு வந்திருப்பதால், இந்தச் சத்தம் கிராமங்களில் இடிமுழக்கம் போலவே நடை பெற்று வரவேண்டும். ஜனங்களே! உடனே சுயராஜ்ய ஸ்தாபன சபை கூட்டும்படி இரைச்சல் போடுங்கள். அழுத பிள்ளை பால் குடிக்கும். 43. நமது மகமதிய சகோதரர்கள் 1906 góà: 23 “ஸத்யமேவ ஜயதே இந்தியாவின் வருங்காலப் பெருமைக்கும், சிறப்புக்கும், இத் தேச ஜனங்களில் பெரும் பாலார் ஹிந்துக்கள், மகமதியர் என இரண்டு பகுதிப்பட்டு நிற்பது பெரும் தடையாகவே இருக்கிறதென்பதை ஒளித்து வைத்து பிரயோஜனமில்லை. தென்னிந்திய கிராமாந்திரங் களிலே மகமதியர்களும், ஹிந்துக்களும் தமக்குள்ள வேறு