பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I53 நேர்ந்தால் இந்திய மஹமதியரின் கதி என்ன ஆகுமோ என்றெண்ணி அவர்கள் பெருமூச்செறிந்தார்கள். இன்றைக்கு அவர்களில் சிலர் பூரீமான் காந்தியின் பரம சிஷ்யர்களாக இருக்கிருர்கள். இன்றைக்கு எங்கு பார்த் தாலும் ஹிந்து முஸ்லிம்கீ ஜய் என்ற சத்தம் பிறந்து விட்டது. மஹமதியர்களின் மசூதிகளுக்குள் ஹிந்துக்கள் உபந்யாசர்களாய் முஸ்லிம்களுக்கு ஸ்வராஜ்ய உப தேசம் பண்ணுகிருர்கள். டில்லி நகரத்தில், சில தினங் களின் முன்பு உலோமாக்களின் ஸர்வ பாரத ஸங்கம் நடைபெற்றபோது அங்கு ரீ காந்தி விருந்தாளியாகச், சென்றிருந்தார். இதைக்காட்டிலும் வினேதமான செய்தி ஹிந்துக்களின் கொள்கைக்கிணங்கி முஸல் மான்கள் முக்யமான உத்ஸவ காலங்களில் பசுக்களை விட்டு ஆடுகளைக் கொல்ல உடம்பட்டதாகும். ஆனல் இப்படிச் செய்யலாமென்று அக்பர் சக்கரவர்த்தி விதித் திருக்கிரு.ர்." என்று மேன்மேலும் ஸர் வாலன்டைன் தமது மன வருத்தத்தை விஸ்தரித் தெழுதிக்கொண்டு போகிரு.ர். பொருமையும் வயிற்றெரிச்சலும் இந்த வார்த்தைகளில் கொழுந்து விட்டெரிகின்றன. இப்படிப்பட்ட மனுேபாவ விலாஸங்களே இங்கிலாந்தில் ப்ரகடனம் செய்வதனல் யாருக்கென்ன பயன் விளையுமென்று டைம்ஸ் பத்திரிகை அதிகாரிகள் நினைக்கிருர்கள் என்பதை நம்மால் ஊஹிக்க முடியவில்லை. ஆனல் தேசிய பாடசாலைகளில் ஹிந்து மத கிரந்தங் களுக்குத் தக்கபடி கல்வி கற்பிக்கப்படுமாதலால் அப் பாடசாலைகள் முஸல்மான்களுக்குப் பயன்பட மாட்டா வென்று ஸர் வாலன்டைன் சொல்லும்போதுதான். அவர் நம்பிக்கையின் வரம்புக்கு வெளியே பஹிரங்கமாக Աfm Լյm,-l{)