பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நாட்டு வணக்கம் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே-அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே-இதை வந்தனை கூறி மனத்தில் இருத்தினன் வாயுற வாழ்த்தேனே?-இதை 'வந்தே மாதரம், வந்தே மாதரம்' என்று வணங்கேனே? (1) இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள் ஈந்ததும் இந்நாடே-எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே-அவர் கன்னிய ராகி நிலவினி லாடிக் களித்ததும் இந்நாடே-தங்கள் பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல் போந்ததும் இந்நாடே-இதை 'வந்தே மாதரம், வந்தே மாதரம்' என்று வணங்கேனே? (2) மங்கைய ராயவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே-அவர் தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித் தழுவிய திந்நாடே-மக்கள் துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே-பின்னர் அங்கவர் மாய அவருடற் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே-இதை 'வந்தே மாதரம், வந்தே மாதரம்: என்று வணங்கேனே? (3)