பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஆற்றினி லேசுன யூற்றினிலே-தென்றல் காற்றினி லேமலைப் பேற்றினிலே ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி இனத்தினி லேஉயர் நாடு-இந்தப் (யாருக்) தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே-கணி ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே தேட்டத்தி லேஅடங் காத நிதியின் சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்) 4. பாரத தேசம் பல்லவி பாரத தேசமென்று பெயர்சொல்லு வார்-மிகப் பயங்கொள்ளு வார்துயர்ப் பகைவெல்லு வார் சரணங்கள் வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; அடி மேலேக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்: பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் (பாரத) சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்: சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்: வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம் (பாரத) வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம் வேறு பலபொருளும் குடைந்தெடுப்போம்: எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம் (பாரத)