பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 'ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள் உலகின்பக் கேணி என்றே-மிக நன்றுபல் வேதம் வரைந்தகை பாரத நாயகி தன்திருக் கை. சித்த மயமிவ் வுலகம் உறுதிநம் சித்தத்தில் ஓங்கி விட்டால்-துன்பம் அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல் ஆரிய ராணியின் சொல். சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத் தட்டி விளையாடி-நன்று உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி ஒளியுறப் பெற்ற பிள்ளை. காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது கல்லொத்த தோள்எவர் தோள்?-ளம்மை ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள் ஆரிய தேவியின் தோள். சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம் தந்த தெவர்கொடைக் கை?-சுவைப் பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும் பாரத ராணியின் கை. போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை புகன்ற தெவருடை வாய்?-பகை தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத தேவி மலர்த்திரு வாய். தந்தை இனிதுறத் தான்அரசாட்சியும் தையலர் தம்முறவும்-இனி இந்த உலகில் விரும்புகிலேன்என்றது எம்ஆனை செய்தஉள் ளம்.