பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 நாவினில் வேத முடையவள் கையில் நலந்திகழ் வாளுடை யாள்-தனை மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை வீட்டிடு தோளுடை யாள். அறுபது கோடி தடக்கைக ளாலும் அறங்கள் நடத்துவள் தாய்-தனைச் செறுவது நாடி வருபவ ரைத்துகள் செய்து கிடத்துவள் தாய். பூமி யினும்பொறை மிக்குடை யாள்பெரும் புண்ணிய நெஞ்சினள் தாய்-எனில் தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்' துர்க்கை யனையவள் தாய். கற்றைச் சடைமதி வைத்த துறவியைக் கைதொழு வாள்ளங்கள் தாய்-கையில் ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும் ஒருவனை யுத்தொழு வாள். யோகத்தி லேநிகரற்றவள் உண்மையும் ஒன்றென நன்றறி வாள்-உயர் போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும் பொற்குவை தானுடை யாள். நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரி வாள் எங்கள் தாய்-அவர் அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின் ஆனந்தக் கூத்திடு வாள். வெண்மை வளரிம யாசலன் தந்த விறன்மக ளாம்.எங்கள் தாய்-அவன் திண்மை மறையினும் தான்மறை யாள் நித்தஞ் சீருறு வாள்.எங்கள் தாய். 10