பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 4. 9. வெறிகொண்ட தாய் பேயவள் காண்எங்கள் அன்னை-பெரும் பித்துடை யாள்.எங்கள் அன்னை காயழல் ஏந்திய பித்தன்-தனைக் காதலிப் பாள்.எங்கள் அன்னை. இன்னிசை யாம்இன்பக் கடலில்-எழுந்து எற்றும் அலைத்திரள் வெள்ளம் தன்னிடம் மூழ்கித் திளைப்பாள்-அங்குத் தாவிக் குதிப்பாள்ளம் அன்னை. தீஞ்சொற் கவிதையஞ் சோலை-தனில் தெய்வீக நன்மணம் வீசும் தேஞ்சொரி மாமலர் சூடி-மதுத் தேக்கி நடிப்பள்எம் அன்னை வேதங்கள் பாடுவள் காணிர்-உண்மை வேல்கையிற் பற்றிக் குதிப்பாள் ஒதருஞ் சாத்திரம் கோடி-உணர்ந் தோதி யுலகெங்கும் விதைப்பாள். பாரதப் போரெனில் எளிதோ?-விறற் பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள் மாரதர் கோடிவந் தாலும்-கணம் மாய்த்துக் குருதியில் திளைப்பாள். (பேயவள்) (பேயவள்) (பேயவள்) (யேயவள்) (பேயவள்) 10. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி பொழுது புலர்ந்தது. யாம்செய்த தவத்தால்: புன்மை யிருட்கணம் போயின யாவும்: எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி: