பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. 50 சிப்பாயைக் கண்டு அஞ்சுவார்-ஊர்ச் சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்: துப்பாக்கி கொண்டொருவன்-வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார், அப்பால் எவனே செல்லுவான்-அவன் ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற்பார்: எப்போதும் கைகட்டுவார்-இவர் யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார் (நெஞ்சு) நெஞ்சு பொறுக்கு திலேயே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், கொஞ்சமோ பிரிவினைகள்?-ஒரு கோடிஎன் ருல்அது பெரிதாமோ? ஐந்துதலைப் பாம்பென்பான்-அப்பன் ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால், நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு) சாத்திரங்கள் ஒன்றும் காணுர்-பொய்ச் சாத்திரப் பேய்கள்சொல்லும் வார்த்தை நம்பியே கோத்திரம் ஒன்ரு யிருந்தாலும்-ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்! தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச் குதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்; ஆத்திரங் கொண்டே இவன் சைவன்-இவன் அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார்! (நெஞ்சு) நெஞ்சு பொறுக்கு திலையே-இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே: கஞ்சி குடிப்பதற் கிலார்-அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சம் என்றே-நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின் ருரே-இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலேயே. (நெஞ்சு)