பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. 5. 17. ஜாதீய கீதம் (பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் எழுதிய 'வந்தே மாதரம்" கீதத்தின் மொழிபெயர்ப்பு) இனியநீர்ப் பெருக்கின! இன்கனி வளத்தினை! தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை! பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே) வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை! மலர்மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை! குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை! நல்குவை இன்பம், வரம்பல நல்குவை! (வந்தே)

  • முப்பது கோடிவாய் (நின்னிசை) முழங்கவும் அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும் திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்? அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி! பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை!

(வந்தே) நீயே வித்தை, நீயே தருமம்! நீயே இதயம், நீயே மருமம்! உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே) தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே! சித்தம்நீங் காதுறு பக்தியும் நீயே! ஆலயந் தோறும் அணிபெற விளங்கும் தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே) ஒருபது படைகொளும் உமையவள் நீயே! கமலமெல் விதழ்களிற் களித்திடுங் கமலைநீ! வித்தைநன் கருளும் வெண்மலர்த் தேவிநீ! (வந்தே)

  • மூலப் பாடலில் ஏழு கோடி என்றே குறிப்பிடப்பட்டிருக்

கிறது, ஆனால் அது வங்காளத்தை மட்டுமே குறித்தது,