பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. வங்கமே வாழிய அங்கமே தளர்வெய்திய காலையும் அங்கோர் புன்னரி தந்திடு மூனுணுச் சிங்கமே யெனவாழ்தல் சிறப்பெனச் செம்மை கூறிநந் தாய்ப்பெருந் தேயத்தைப் பங்கமே பெறு மிந்நிலை நின்றுயர் பண்டை மாண்பிடைக் கொண்டினி துய்த்திடும் வங்கமே யென வந்தனை வாழிநீ வங்கமே நனி வாழிய வாழிய! I கற்பகத் தருப்போலெது கேட்பினும் கடிது நல்கிடும் பாரத நாட்டினிற் பொற்புறப் பிறந்தோம், நமக்கோர் விதப் பொருளு மன்னிய ரீதல் பொறுக்கிலேம் அற்பர் போலப் பிறர்கர நோக்கியாம் அவனி வாழ்தலா காதென நன்கிதை வற்புறுத்திடத் தோன்றிய தெய்வமே வங்கமே நனி வாழிய வாழிய! 2 கண்ணினிர் துடைப்பாய் புன்னகை கொள்வாய் கவினுறும்பர தப்பெருந் தேவியே உண்ணி கழ்ந்திடுந் துன்பம் களைதியால் உன்றன் மைந்தர்கள் மேனெறி யுற்றனர். பெண்ணி னெஞ்சிற் கிதமென லாவது பெற்ற பிள்ளைகள் பீடுறவே யன்ருே? மண்ணிநீ புகழ் மேவிட வாழ்த்திய வங்கமே நனி வாழிய வாழிய! 3 T5-9. 1905