பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. எனது தாய்காட்டின் முன்னட்பெருமையும் இன்னட் சிறுமையும் கண்ணிகள் புன்னகையு மின்னிசையு மெங்கொளித்துப் போயினவோ இன்னலொடு கண்ணி ரிருப்பாகி விட்டனவே! ஆணெலாம் பெண்ணுய் அரிவையரெலாம் விலங்காய் மானெலாம் பாழாகி மங்கிவிட்ட திந்நாடே! ஆரியர்கள் வாழ்ந்துவரும் அற்புதநா டென்பதுபோய்ப் பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே! வீமாதி வீரர் விளிந்தெங்கு போயினரோ! ஏமாறி நிற்கு மிழிஞர்களிங் குள்ளாரே! வேத வுபநிடத மெய்நூல்க ளெல்லாம்போய் பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே! ஆதி மறைக்கீதம் அரிவையர்கள் சொன்னதுபோய் வீதி பெருக்கும் விலையடிமை யாயினரே! செந்தேனும் பாலும் தெவிட்டிநின்ற நாட்டினிலே வந்தே தீப்பஞ்ச மரபாகி விட்டதுவே! மாமுனிவர் தோன்றி மணமுயர்நீத நாட்டினிலே காமுகரும் பொய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே! பொன்னு மணியுமிகப் பொங்கிநின்ற விந்நாட்டில் அன்னமின்றி நாளு மழிவார்களெத்தனைபேர்? + 1-4-1906 24. சத்ரபதி சிவாஜி (தன் சைனியத்திற்குக் கூறியது) ஜயஜய பவானி ஜயஜய பாரதம்! ஜயஜய மாதா ஜயஜய துர்க்கா! வந்தே மாதரம் வந்தே மாதரம்! சேனைத்தலைவர்காள்! சிறந்தமந் திரிகாள்! யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்! 5