பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்? மானமென் றிலாது மாற்றலர் தொழும்பராய் ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்? தாய்பிறன் கைப்படச் சகிப்பவு னகி நாயென வாழ்வோன் நமரில்இங் குளனே? பிச்சைவாழ்வுகந்து பிறருடையாட்சியில் அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன். புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன். மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும் ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன் ஆரியத்தேன்மை அற்றிடுஞ் சிறியர் யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக! படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக் கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்! சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப மாதரார் நலத்தின் மகிழ்பவன்'மகிழ்க; நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான் வீடுசென் ருெளிக்க விரும்புவோன் விரும்புக! தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க! நாட்டுளார் பசியினல் நலிந்திடத் தன்வயிறு ஊட்டுதல் பெரிதென உன்னுவோன் செல்க! ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும் வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன். ஆரியர் இருமின் ஆண்கள்.இங்கு இருமின்! வீரியம் மிகுந்த மேன்மையோர்;இருமின்! மானமே பெரிதென மதிப்பவர் இருமின்! ஈனமே பொருத இயல்பினர் இருமின்! தாய்நாட் டன்புறு தனையர்இங்கு இருமின்! 70 75 80 85 90 95