பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்டா ரடீ!-சிளியே ஊமைச் சனங்க ளடி! 10 ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா மாக்களுக் கோர்கணமும்-கிளியே வாழத் தகுதி யுண்டோ? 11 மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும் ஈனர்க் குலகந் தனில்-கிளியே இருக்க நிலைமை யுண்டோ? 12 சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல், வந்தே மாதர மென்பார்-கிளியே மனத்தி லதனைக் கொள்ளார். 13 பழமை பழமை யென்று பாவனை ப்ேசலன் றிப் பழமை இருந்த நிலை-கிளியே! பாமர ரேதறி வார்? 14 நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழிசெல்வத் தேட்டில் விருப்புங் கொண்டே-கிளியே சிறுமை யடைவா ரடீ! 15 சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தை இரங்கா ரடி-கிளியே செம்மை மறந்தா ரடி! I6 பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல் துஞ்சத்தம் கண்ணுற் கண்டும்-கிளியே சோம்பிக் கிடப்பாரடி! 17 தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுருர் வாயைத் திறந்து சும்மா-கிளியே வந்தே மாதர மென்பார்! 1&