பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 2. புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும் பொய்யென்று கண்டாரேல்-அவர் இகழுறும் சனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு இச்சையுற் றிருப்பாரோ? 3. பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும் பெற்றியை அறிந்தாரேல்-மானம் துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது சுகமென்று மதிப்பாரோ? 4. மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும் வாய்மையை உணர்ந்தாரேல்-அவர் ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற உடன்படு மாறுளதோ? 5. விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய் மின்மினி கொள்வாரோ? கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் கைகட்டிப் பிழைப்பாரோ? 6. மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை யிழப்பாரோ? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினல் கைகொட்டிச் சிரியாரோ? 7. வந்தே மாதரம் என்று வணங்கியபின் மாயத்தை வணங்குவரோ? வந்தே மாதரம் ஒன்றே தாரகம் என்பதை மறப்பாரோ? 33. சுதந்திரப் பயிர் கண்ணிகள் (iர) (வீர) (வீர) (வீர) (வீர) (வீர) தண்ணிர்விட்டோ வளர்த்தோம்? சர்வேசா இப்பயிரைக் கண்ணிராற் காத்தோம்; கருகத் திருவுளமோ? எண்ணமெலாம் நெய்யாக,எம்முயிரி னுள்வளர்ந்த வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?