பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பெண் விடுதலை 1 இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குச் சீட்டுக் கொடுத்தாய் விட்டதென்று சில தினங்களின் முன்பு ராய்டர் தந்தி வந்தது. அதைப் பற்றிய பத்திராதிபர் குறிப்பொன்று ஸ்திரீகளின் ஐயம்” என்ற மகுடத்துடன் சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. நேற்று மாலே நானும் என்னுடைய சினேகிதர் வேதாந்த சிரோமணி ராமராயரும் வேறு சிலருமாக இருக்கையில் மேற்படி தேதி (அதாவது 'ஸ்திரீகளின் ஐயம்' எழுதியிருந்த) சுதேசமித்திரன் பத்திரிகையைக் கையில் எடுத்துக் கொண்டு மோட்டு வீதி கோபாலய்யர் பத்தினி வேதவல்லி அம்மை வந்தார். வேதவல்லி அம்மைக்கு காற்பது வயது. தமிழிலும் இங்கிலீஷிலும் உயர்ந்த படிப்பு. ஸம்ஸ்கிருதம் கொஞ்சம் தெரியும். இவருடைய புருஷன் கோபாலய்யர் பெரிய சர்க்கார் உத்தியோகத்திலிருந்து விலகி பணச்செருக்கு மிகுந்தவராய் தமது பத்தினியாகிய வேதவல்லியுடனும் நான்கு குழந்தைகளுட னும் செளக்கியமாக வேதபுரத்தில் வாழ்ந்து வருகிரு.ர். வேத வல்லிக்கு அவர் விடுதலை கொடுத்துவிட்டார். எங்கும் போக லாம். யாருடனும் பேசலாம். வீட்டுச் சமையல் முதலிய காரிய மெல்லாம் ஒரு கிழவி பார்த்துக் கொள்கிருள். வேதவல்லி அம்மை புஸ்தகம், பத்திரிகை, சாஸ்திர ஆராய்ச்சி, பொதுக் கூட்டம் முதலியவற்றிலே காலங் கழித்து வருகிருர். வேதவல்லி வரும்போது நான் ராமராயர் முதலியவர்களுடன் வேதவியாசர் செய்த பிரம்ம சூத்திரத்திற்கு சங்கராச்சாரியர் எழுதின அத்வைத பாஷ்யத்தை வாசித்து அதன் சம்பந்தமாகத் தர்க்கித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் வேதவல்லியார் வந்தனர். (ஒருமை பன்மை இரண்டும் பெண்களுக்கு உயர்வையே